
கரூர்: எங்கள் மீது புகார் அளித்திருப்பதால் நாங்கள் பயந்து ஓடிவிடுவோம் என யாரும் நினைக்க வேண்டாம் என வருமான வரித் துறை புலனாய்வுப் பிரிவு இயக்குநர் சிவசங்கரன் நேற்று தெரிவித்தார்.
கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் வீட்டுக்கு வருமான வரித் துறையினர் சென்றபோது, அவர்களை திமுகவினர் மறித்து வாக்குவாதம் செய்து, தாக்கியதுடன் அவர்கள் வந்த கார் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினர். இதில் காயமடைந்த அதிகாரிகள் காயத்ரி, சுனில்குமார், கல்லா சீனிவாசராவ், பங்கஜ்குமார் ஆகியோர் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் சேர்ந்து சிகிச்சை பெற்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்