Saturday, June 24, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/06/25/large/1025778.jpgதமழகததல படடயலன மககள மதன வனமறகள ஒடகக நடவடகக - மததய அமசசர ரமதஸ அதவல வலயறததல

சென்னை: தமிழகத்தில் பட்டியலின மக்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளை ஒடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்தார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்துச் செல்லும் அனைவருக்குமான அரசாக உள்ளது. இதுதான் எங்கள் கூட்டணியின் நோக்கம். ஜி20 தலைமையை இந்தியா ஏற்றது பெருமையாக உள்ளது. கடந்த 9 வருடத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அனைத்து துறைகளிலும் நல்ல முறையில் பணியாற்றி இருக்கிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்