
சென்னை: கல்வி மூலம் பகுத்தறிவு, சுயமரியாதை, அறிவியல் மனப்பான்மையையும் வளர்த்துக் கொள்ளுங்கள் என்று `சிற்பி' திட்ட நிறைவு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.
சென்னை காவல்துறை சார்பில் நடைபெற்ற `சிற்பி' திட்ட நிறைவு விழா நேரு உள் விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிற்பி திட்டத்தில் பயிற்சி முடித்த 5,000 மாணவ, மாணவிகளிடம் கலந்துரையாடி அவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி, வாழ்த்தினார். மேலும், சிற்பி கீதம் என்ற சிற்பி திட்ட மாணவ, மாணவியருக்கான பாடலையும் வெளியிட்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்