Tuesday, June 27, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/06/27/large/1027836.jpgமடடர அணயல இரநத டலட பசனததறக நர தறபப 13 ஆயரம கன அடயக அதகரபப

மேட்டூர்: மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு 11 ஆயிரம் கன அடியாக திறக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று (27ம் தேதி) மதியம் 13 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையில் நீர் இருப்பை பொறுத்து, காவிரி டெல்டா பாசனத்திற்கு ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். நடப்பாண்டில் போதுமான அளவு நீர் இருப்பு இருந்தையடுத்து, உரிய நாளான ஜூன் 12ம் தேதி முதல்வர் ஸ்டாலின் அணையில் இருந்து நீரை திறந்து வைத்தார். அணையில் இருந்து கடந்த 14 நாட்களாக 10 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் மதியம் 3 மணி முதல் அணையில் இருந்து 11 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்