
மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே சூறாவளிக் காற்றால் பல டன் மா சேதமடைந்துடன், விலையும் இல்லாததால் பலத்த நஷ்டம் ஏற்பட்டதாக பெண் விவசாயி வேதனை தெரிவித்துள்ளார்.
மானாமதுரை அருகே உள்ள மாங்குளத்தைச் சேர்ந்த பெண் விவசாயி ஹேமாதர்ஷினி. இவரது தோட்டத்தில் 3.5 ஏக்கரில் மா மரங்கள் உள்ளன. கல்லாமை, காசாலட்டு, ராஜபாளையம் சப்போட்டா, இமாம்பசந்த் உள்ளிட்ட ரகங்கள் உள்ளன. இங்கு விளையும் மாம்பழங்களை மானாமதுரை, சிவகங்கை, மதுரை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் வாங்கிச் செல்வர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்