
சென்னை: மத்தியில் ஆளும் பாஜக பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். திமுகவினரை சீண்டிப்பார்க்க வேண்டாம். இது மிரட்டல் அல்ல; எச்சரிக்கை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அமலாக்கத் துறை மூலம் கொடுக்கப்படும் தொல்லைகள், அப்பட்டமான அரசியல் பழிவாங்கும் செயல். 10 ஆண்டுகளுக்கு முந்தைய புகாரைக் கொண்டு, 18 மணி நேரம் அடைத்துவைத்து மன அழுத்தம் கொடுத்து, பலவீனப்படுத்தி, உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் இதய நோயை உருவாக்கியுள்ளனர். செந்தில் பாலாஜி மீதான புகாரில் நீதிமன்றத் தீர்ப்பு இருந்தால், விசாரணை நடத்துவதை தவறு என்று கூறவில்லை. ஆனால், 5 முறை எம்எல்ஏவாக, 2-வது முறையாக அமைச்சராகியுள்ள அவரை, தீவிரவாதியைப்போல் அடைத்துவைத்து விசாரிக்க என்ன அவசியம் உள்ளது?
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்