
சென்னை: வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி தனது இடைக்கால அறிக்கையை கடந்த 28-ம் தேதி சமர்ப்பித்துள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள பட்டியலின மக்களுக்கான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரம் கடந்த 2022 டிச.26-ம் தேதி தெரியவந்தது. தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த விவகாரம் குறித்து முதலில் வெள்ளனூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், பின்னர் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்