
மதுரை: பைபிளில் கூறப்பட்டுள்ள நிரந்தர நரகம் என்ற தண்டனை நவீன சட்டமுறையில் சாத்தியமல்ல என உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கூறியுள்ளார்.
திருச்சியைச் சேர்ந்த எஸ்.சந்திரன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், "சிங்கப்பூரில் கொத்தனராக பணிபுரிகிறேன். திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் 1994-ல் பாஸ்போர்ட் பெற்றேன். என் பாஸ்போர்ட் 2014-ல் காலாவதியானது. பாஸ்போர்ட் புதுப்பிக்க முகவர் வழியாக விண்ணப்பித்தேன். அந்த முகவர் பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் தவறான தகவல் அளித்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்