
சென்னை: ரேஷன் கடை, சத்துணவு திட்டம் வாயிலாக உடல் நலத்துக்கு பாதிப்பை ஏற்படும் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்குவதை தடை விதிக்க கோரிய வழக்கிற்கு மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கடலூர் மாவட்டம், முருகன்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் கனிமொழி மணிமாறன். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது, "தமிழ் தேசிய பேரியக்கத்தின் உள்ள மகளிர் ஆயத்தின் செயலாளராக உள்ளேன். பொதுவாக பெரும்பாலான இந்திய பெண்களுக்கு ரத்த சோகை இருக்கும். ஒவ்வொருவருக்கும் ஊட்டச்சத்து குறைபாடு இருப்பதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. இதற்கு ஏழ்மை, உணவு பழக்கம் உள்ளிட்ட பல காரணங்கள் கூறப்படுகின்றன. ஆனால், மத்திய அரசு, இதுகுறித்து எந்த ஒரு முறையான ஆய்வுகளையும் மேற்கொள்ளாமல், செறிவூட்டப்பட்ட அரிசியை மக்களுக்கு வழங்க உத்தரவிட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்