
ராமேசுவரம்: ‘அப்துல் கலாம் - நினைவுகளுக்கு மரணமில்லை’ என்ற தலைப்பிலான ஆங்கிலப் பதிப்பு நூலை ராமேசுவரத்தில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அமித் ஷா வெளியிடுகிறார்.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை, ‘அப்துல் கலாம் - நினைவுகளுக்கு மரணமில்லை’ என்ற தலைப்பில், அவரது அண்ணன் மகள் ஏபிஜேஎம் நசீமா மரைக்காயர், விண்வெளி விஞ்ஞானி ஒய்.எஸ்.ராஜன் ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்