Tuesday, July 25, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/07/26/large/1067125.jpgதமிழக மீனவர்கள் 9 பேரை மீட்க கோரி மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 9 தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து முதல்வர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: இலங்கை கடற்படையினரால் தமிழகத்தை சேர்ந்த 9 மீனவர்கள் கடந்த 24-ம் தேதி கைது செய்யப்பட்டுள்ளனர். நீண்டகாலமாக நிலவிவரும் இப்பிரச்சினையை தீர்க்க தூதரக அளவிலான முயற்சிகளை முடுக்கிவிடுமாறு சமீபத்தில் கோரிக்கை விடுத்தேன். இருப்பினும், இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது கவலையை ஏற்படுத்திவரும் நிலையில், ஏமாற்ற உணர்வுடன் இந்த கடிதத்தை எழுதுகிறேன்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்