
சென்னை: கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்க தவறியவர்கள் மற்றும் முதியோர் ஓய்வூதியம், மாற்றுத் திறனாளி உதவித் தொகை பெறும் குடும்பங்களை சேர்ந்த பெண்கள் விண்ணப்பிப்பதற்காக தமிழகம் முழுவதும் இன்று முதல் 3 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.
கடந்த 2021 சட்டப்பேரவை பொதுத் தேர்தலின்போது திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமை தொகையாக மாதம்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின்கீழ், தமிழகத்தில் ஒரு கோடி மகளிருக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் வகையில் இந்த ஆண்டு பட்ஜெட்டில் ரூ.7,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. செப்.15-ம் தேதி அண்ணா பிறந்தநாளில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் தொடங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்