
கோவை: கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தின் கீழ் 906 குளங்களில் சோதனை ஓட்டப் பணி நிறைவு பெற்றுள்ளதாகவும், மீதமுள்ள 139 குளங்களில் சோதனை ஓட்டம் இம்மாத இறுதிக்குள் முடிக்கப்படும் எனவும் நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் போதிய மழை பெய்யாததால், நிலத்தடி நீர்மட்டம் ஆயிரம் அடிக்கும் கீழே சென்றது. இதனால் போதிய நீராதாரமின்றி பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் தரிசாக மாறின. இதற்கு தீர்வாக பவானி ஆற்றின் உபரி நீரை பயன்படுத்தி, கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் உள்ள 1,045 குளம், குட்டைகளை நிரப்ப ரூ.1,657 கோடி மதிப்பில் அத்திக்கடவு - அவிநாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டப்பணி, கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தமிழக அரசின் நீர்வளத்துறையினரால் தொடங்கப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்