
திருவள்ளூர்: சென்னை - மாத்தூரில் டவர் ஃபேன் எரிந்ததால் உருகிய கொசுவிரட்டியால் மூச்சுத் திணறி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சிறுமிகள், மூதாட்டி என, 4 பேர் உயிரிழந்த சம்பவம், தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மணலி அருகே உள்ள மாத்தூர் எம்.எம்.டி.ஏ., குடியிருப்பு 3-வது பிரதான சாலை, 79-வது குறுக்குத் தெருவில் வசித்து வருபவர் உடையார்(40). இவரது மனைவி செல்வி(32). இத்தம்பதிக்கு சந்தியா(10), பிரியா லட்சுமி(8) என 2 மகள்கள் உள்ளனர். இவர்கள், மாத்தூரில் உள்ள அரசு பள்ளியில் படித்து வந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்