Wednesday, September 20, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/09/21/large/1126259.jpgபாஜக குறித்து பொதுவெளியில் கருத்து தெரிவிக்க கூடாது: அதிமுக நிர்வாகிகளுக்கு கட்சி தலைமை அறிவுறுத்தல்

சென்னை: மக்களவை தேர்தல் கூட்டணி மற்றும் பாஜக குறித்து பொதுவெளியில் அதிமுக நிர்வாகிகள் யாரும் கருத்து தெரிவிக்க வேண்டாம் என்று கட்சித் தலைமை அறிவுறுத்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சில தினங்களுக்கு முன்பு, அறிஞர் அண்ணா குறித்து கருத்து தெரிவித்திருந்தார். அதற்குஅதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்திருந்தார். சில தினங்களுக்கு முன் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தபோது, “முன்னாள்முதல்வர் ஜெயலலிதாவை விமர்சனம் செய்த அண்ணாமலைக்கு எதிராக அதிமுகவினர் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தனர். அதன்பிறகு அண்ணா குறித்து பேசுகிறார். கடுமையான கண்டனத்தை தெரிவித்த நிலையில் அதற்கும் திருந்தாமல், திரும்பவும் பெரியார் குறித்தும், மற்ற விஷயங்கள் குறித்தும் கூட்டணியில் இருந்துகொண்டு கூட்டணி தர்மத்தை மீறி பேசுகின்ற செயலை கட்சித் தொண்டர்கள் எந்த நிலையிலும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதிமுக கூட்டணியில் தற்போது பாஜக இல்லை. கூட்டணி குறித்து தேர்தல் வரும்போதுதான் முடிவு செய்ய முடியும். இதுதான் கட்சியின் முடிவு என்று தெரிவித்திருந்தார். இதனால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்