Tuesday, September 26, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/09/27/large/1129444.jpgஇபிஎஸ் உதவியாளர் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிய அமலாக்கத் துறைக்கு உத்தரவு

சென்னை: தருமபுரியைச் சேர்ந்த டி.சி.இளங்கோவன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருந்தாவது: விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் கிராமத்தில் உள்ள நிலத்தை நவீன் பாலாஜி, மாணிக்கவேல் ஆகியோரிடமிருந்து வாங்கி வானூர் சார்- பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்ய விண்ணப்பித்தோம்.

ஆனால், புதுச்சேரியை சேர்ந்த டி.ராமராஜ், கடலூரைச் சேர்ந்த சி.கே.எஸ்.கார்த்திகேயன், சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த வேலு, தடபெரும்பாக்கம் பொன்.ராஜா, நாமக்கல் எம்.சேகர் உள்ளிட்ட பலர் இந்த நிலத்துக்கு கடன் கொடுத்துள்ளதாகவும், எனவே இந்த நிலத்தை பதிவு செய்து கொடுக்க முடியாது என்றும் பத்திரப்பதிவு அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தனர். பின்னர் எனது பெயருக்கு பத்திரப்பதிவு செய்து கொடுக்க ரூ. பல லட்சத்தை லஞ்சமாக தர வேண்டுமெனக் கோருகின்றனர். எனவே எனது பெயருக்கு பத்திரப்பதிவு செய்து கொடுக்க வானூர் சார்-பதிவாளருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் கோரியிருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்