
சென்னை: சட்டமுறை எடையளவு விதிகளின்கீழ் ஆய்வு செய்யும் போது எடைக்கற்களில் விதிமீறல்கள் காணப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழிலாளர் நல ஆணையர் அதுல் ஆனந்த் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சந்தைகள், சாலையோரம், நடைபாதைகளில் உள்ள காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்யும் கடைகள், மீன் மார்க்கெட்கள், இறைச்சிக் கடைகள் ஆகியவற்றில் எடை குறைவாக விநியோகம் செய்தல், முத்திரை மற்றும் மறுமுத்திரையிடாமல் எடையளவுகளை வைத்திருத்தல், தரப்படுத்தப்படாத எடையளவுகளை பயன்படுத்துதல் போன்ற புகார்கள் வந்தன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்