Wednesday, October 25, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/10/25/large/1143795.jpgபாசி நிதி நிறுவன மோசடி வழக்கு: ஐ.ஜி பிரமோத்குமாரை கைது செய்து ஆஜர்படுத்த கோவை நீதிமன்றம் உத்தரவு

கோவை: பாசி நிதிநிறுவன மோசடி வழக்கில் லஞ்சம் பெற்ற வழக்கில் ஆஜராகாத ஐ.ஜி பிரமோத்குமாரை கைது செய்து ஆஜர்படுத்த வேண்டும் என சிபிஐ டிஐஜி-க்கு கோவை சிபிஐ நீதிமன்றம் புதன்கிழமை (அக்.25) உத்தரவிட்டுள்ளது.

திருப்பூரை தலைமையிடமாகக் கொண்டு கடந்த 2009-ம் ஆண்டில் ‘பாசி போரக்ஸ் டிரேடிங்’ என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. முதலீட்டுக்கு அதிக வட்டி அளிப்பதாகக் கூறி, இந்த நிறுவனம் மூலம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்களிடம் பணம் வசூல் செய்யப்பட்டது. ஆனால், முதலீடு செய்தவர்களுக்கு வாக்குறுதி அளித்தபடி பணம் திரும்ப வழங்கப்படவில்லை. இதையடுத்து, முதலீட்டாளர்கள் அளித்த புகார் அடிப்படையில், திருப்பூர் மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்