
சென்னை: ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட, பல்கலைக்கழகங்கள் திருத்தச் சட்டங்கள் தொடர்பான 10 மசோதாக்களும் நேற்று நடைபெற்ற சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் மீண்டும் நிறைவேற்றப்பட்டன.
தமிழக சட்டப்பேரவையில் கடந்த 2020-ம் ஆண்டு முதல், பல்கலைக்கழகங்கள் தொடர்பான சட்டத்திருத்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டன. இந்த மசோதாக்கள் ஒப்புதல் அளிக்கப்படாமல் நிலுவையில் இருந்தன. எனவே, மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலநிர்ணயம் செய்யக் கோரி, உச்ச நீதிமன்றத்தை தமிழக அரசு நாடியது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்