
சென்னை: இந்திய அரசியலமைப்புச் சட்டம் முழுமை பெறாத ஆவணமாக உள்ளது என்று சட்டப் பல்கலை விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் சார்பில் இந்திய அரசியலமைப்பு சட்டதின விழா சென்னை பெருங்குடியில் உள்ள அதன் வளாகத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அதன்பின்னர் ஆளுநரின் முன்னிலையில் சட்ட பல்கலைக்கழக மாணவர்கள் அரசியலமைப்பு தின உறுதி மொழியை ஏற்றுக் கொண்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்