
சென்னை: புயல், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடும்ப அட்டைதாரர்கள் தவிர யாருக்கு, எந்த ஆவணத்தின் அடிப்படையில் ரூ.6 ஆயிரம் நிவாரணம் வழங்கலாம் என்பது குறித்து நிதி மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழை மற்றும்வெள்ளத்தால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடும்ப அட்டை அடிப்படையில் ரூ.6 ஆயிரம், உயிரிழப்பு ஏற்பட்டிருந்தால் ரூ.5 லட்சம், கால்நடை இழப்பு, வீடு சேதம், பயிர் இழப்பு, படகு சேதம் உள்ளிட்டவற்றுக்கு இழப்பீடு என நிவாரணத்தை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்