Wednesday, December 27, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/12/28/large/1174981.jpgசென்னை எண்ணூரில் உர தொழிற்சாலையில் வாயு கசிவு: மூச்சு திணறல், தொண்டை எரிச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை

சென்னை: சென்னை எண்ணூரில் உள்ள தனியார் உரத் தொழிற்சாலையில் திடீரென அமோனியா வாயு கசிவு ஏற்பட்டதால், நூற்றுக்கணக்கான மக்கள் மூச்சு திணறல், தொண்டை எரிச்சலால் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆலையை மூடுமாறு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், உற்பத்தியை நிறுத்தி வைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை எண்ணூர் பெரியகுப்பம் பகுதியில் கோரமண்டல் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் உரத் தொழிற்சாலை உள்ளது. இந்த ஆலைக்கு அமோனியா வாயுதான் முக்கிய மூலப்பொருள் ஆகும். சரக்கு கப்பல்களில் திரவ வடிவில் கொண்டு வரப்படும் அமோனியா வாயு, எண்ணூர் பகுதியில் கடலில் பதிக்கப்பட்டுள்ள குழாய் வழியாக ஆலைக்கு கொண்டு வரப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்