
ராஜபாளையம்: ராஜபாளையம் காவலர் குடியிருப்பு பகுதியில் பாதாள சாக்கடை அடைப்பை ஆய்வு செய்தபோது விஷவாயு தாக்கியதில் ஒப்பந்த தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்தனர்.
ராஜபாளையம் நகராட்சியில் கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மத்திய அரசின் அம்ருத் திட்டத்தில் ரூ.258.25 கோடி மதிப்பிலான பாதாள சாக்கடை திட்ட பணிகள் தொடங்கப்பட்டது. நகராட்சியில் உள்ள 42 வார்டுகள் 3 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு தனித்தனியாக கழிவு நீரேற்றும் நிலையம் அமைக்கப்பட்டது. இதில் வீடுகளில் கழிவு நீர் சேகரிப்பு இணைப்பு, கழிவு நீர் உந்து குழாய்கள் பொருத்தப்பட்டு, அனைத்து தெருக்களிலும் குழாய்கள் பதிக்கப்பட்டது. தற்போது ஒவ்வொரு பகுதியாக பாதாள சாக்கடை இணைப்பு வழங்கி சோதனை நடைபெற்று வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்