
சென்னை: பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து கடந்த 2 நாட்களில் 8 லட்சம் பேர் பேருந்து, ரயில்களில் புறப்பட்டு சென்றனர். கடைகளில் புத்தாடை, புதுப்பானை, மஞ்சள், இஞ்சி கொத்து விற்பனை அமோகமாக நடந்து வருவதால், பண்டிகை களைகட்டியுள்ளது.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை இன்று போகியுடன் தொடங்கியது. போகி, தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் என 4 நாள்பண்டிகையாக இது கொண்டாடப்படுகிறது. குழந்தைகளுக்கு நேற்று சனிக்கிழமை முதல் அடுத்த வாரம் புதன்கிழமை வரை தொடர் விடுமுறை வருவதால், பலரும் சொந்த ஊரில் பொங்கல் கொண்டாட திட்டமிட்டு, பயணத்தை தொடங்கியுள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்