
சென்னை: தமிழக வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி, 3 அங்கக விவசாயிகள் நம்மாழ்வார் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக வேளாண்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
2023-24-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், ‘‘வேளாண்மை வளர்ச்சிதிட்டத்தின்கீழ் அங்கக(ஆர்கானிக்) வேளாண்மையில் ஈடுபடுவதுடன், பிற அங்கக விவசாயிகளுக்கும் கைகொடுக்கும் 3 அங்கக விவசாயிகளுக்கு சிறந்த அங்கக விவசாயிகளுக்கான நம்மாழ்வார் விருதுடன், பரிசுத்தொகை, சான்றிதழ், பதக்கம் வழங்கப்படும்’’ என்று அறிவித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்