
சென்னை: ஜெயலலிதாவின் வேதா நிலையம் இல்லத்தை கையகப்படுத்த அரசு வழங்கிய இழப்பீட்டுத் தொகையில் இருந்து அவருடைய வருமான வரி பாக்கியை செலுத்த தடை கோரிய வழக்கை முடித்து வைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா நிலையம் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றும் நோக்கில் தமிழக அரசு அதை அரசுடமையாக்கி கடந்த 2020 ஜூலையில் அரசாணை பிறப்பித்தது. அப்போது இதற்கான இழப்பீட்டுத் தொகையாக ரூ.69 கோடி சென்னை மாவட்ட முதன்மை உரிமையியல் நீதிமன்றத்தில் வைப்பீடு செய்யப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்