Tuesday, August 31, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/01/large/711292.jpgநெய்வேலி அருகே சென்னை- கும்பகோணம் 4 வழிச்சாலையில் ஊராட்சிக்கு சொந்தமான பொதுப்பாதையில் தடுப்புச்சுவர் எழுப்பி அரசு நிலம் ஆக்கிரமிப்பு?

நெய்வேலி அருகே தனியார் மனைப்பிரிவுகளுக்கு செல்லும் மருங்கூர் ஊராட்சிக்கு சொந்தமான தார் சாலையின் குறுக்கே தடுப்புச்சுவர் எழுப்பி, அரசு நிலத்தை ஆக்கிரமித்துள்ளதால் பாதிக்கப்பட்டுள்ள வீட்டு மனை உரிமையாளர்கள் 115 பேர் முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் மனு அனுப்பியுள்ளனர்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகா மருங்கூர் கிராமத்தில் கும்பகோணம் - சென்னை 4 வழிச்சாலையில் டேனக்ஸ் பவர் என்ற தனியார் நிறுவனம் ‘எவர்கிரீன் நகர்’ என்ற பெயரில் வீட்டுமனைகளை விற்பனை செய்து வருகிறது. இதற்காக நகர் ஊரமைப்புத்
துறையின் அங்கீகாரம் மற்றும் பொதுப்பாதை, பூங்கா உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கான இடத்தை ஊராட்சி
மன்றத்துக்கு தானமாக வழங்கி, சுமார் 115 வீட்டுமனைகளை இந்நிறுவனம் விற்றுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்