Monday, August 30, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/31/large/710844.jpgகாரில் மயக்க ஊசி செலுத்தி உளவுத் துறை காவலர் கடத்தலா?- போலீஸார் விசாரணை

மயக்க ஊசி செலுத்தி கடத்திச் சென்று செல்போன் செயலி மூலம் ரூ.1 லட்சத்தை வங்கிக் கணக்குக்கு மாற்றி கொள்ளையடித்துவிட்டதாக டிஜிபி அலுவலக உளவுப்பிரிவு தலைமைக் காவலர் ஒருவர் புகார் அளித்துள்ளார். இதன் உண்மைத்தன்மை குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் டிஜிபி அலுவலகத்தில் உளவுப்பிரிவில் தலைமைக் காவலராக பணிபுரிபவர் ரவி. சூளைமேட்டில் வசிக்கிறார். இவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கொடுத்துள்ள புகார் மனுவில், “கடந்த 28-ம் தேதி தனக்கு தெரிந்த அஜய் என்பவர் தன்னை காரில் அழைத்துச் சென்றார். காரில் அவரது நண்பரும் இருந்தார். அப்போது முதுகுப் பகுதியில் ஏதோ ஊசியை வைத்து குத்தியதில் மயக்கமடைந்தேன். சுமார் 18 மணி நேரம் கழித்து கண்விழித்து பார்த்தபோது ஈசிஆர் பகுதியில் சேற்றில் கிடந்தேன். எனது வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சம் செல்போன் செயலி மூலம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்