Thursday, September 30, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/01/large/721763.jpgவளர்ச்சி திட்டம் தயாரிக்க 12,525 கிராம ஊராட்சிகளிலும் மக்கள் திட்டமிடல் இயக்கம் அக்.2-ல் தொடக்கம்: தேசிய ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் பெரியகருப்பன் தகவல்

கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம் தயாரிக்க தமிழகத்தில் உள்ள 12,525 கிராம ஊராட்சிகளிலும் அக்டோபர் 2-ம் தேதி முதல் இந்தஆண்டு இறுதி வரை மக்கள் திட்டமிடல் இயக்கம் நடத்தப்படும் என்றுமத்திய அமைச்சர் தலைமையிலான ஆய்வுக் கூட்டத்தில் தமிழக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.

வரும் 2022-23 ஆண்டுக்கான கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம் தயாரித்தல் குறித்த ஆய்வுக் கூட்டம் மத்திய ஊரக வளர்ச்சி, ஊராட்சி துறை அமைச்சர் கிரிராஜ் சிங் தலைமையில் காணொலியில் நேற்று நடந்தது. இதில் மத்திய இணை அமைச்சர்கள், பல்வேறு மாநில அமைச்சர்கள், துறை செயலர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்