Wednesday, September 29, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/30/large/721361.jpgஆதரவற்ற பிராணிகளையும் நேசிப்போம்: உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வேண்டுகோள்

ஆதரவற்ற பிராணிகளையும் நேசிப்போம் என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தெரிவித்தார்.

உலக வெறிநோய் தினத்தை முன்னிட்டு, சென்னைக் கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் `விலங்குகள் மற்றும் மனிதர்களில் நாய்களின் மூலமாக பரவும் வெறிநோயினை தடுக்க முற்படும் ஒருங்கிணைந்த முயற்சிகள்' என்ற தலைப்பில் இணைய வழி பன்னாட்டு கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி கருத்தரங்கை தொடங்கிவைத்து உரையாற்றினார். இந்த கருத்தரங்கில் 320 கால்நடை மருத்துவர்கள் மற்றும் மருத்துவ வல்லுநர்கள் பங்கேற்றனர். சர்வதேச அளவிலான வெறிநோய் வல்லுநர்கள் தங்களது கருத்துகளைப் பகிர்ந்துக் கொண்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்