Wednesday, September 29, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/30/large/721360.jpgமதுரவாயல்- துறைமுகம் இடையே 2 அடுக்கில் பறக்கும் சாலை திட்டம்; திட்ட அறிக்கை கிடைத்ததும் பணிகள் தொடங்கப்படும்: நெடுஞ்சாலைத் துறை செயலர் தீரஜ் குமார் தகவல்

நாட்டில் முதல் முறையாக 2 அடுக்கு சாலையாக அமையவுள்ள மதுரவாயல்- துறைமுகம் பறக்கும் சாலைக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி 3 மாதங்களில் நிறைவடையும். திட்ட அறிக்கை கிடைத்ததும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் நிதி முதலீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று நெடுஞ்சாலைத் துறை செயலர் தீரஜ் குமார் தெரிவித்துள்ளார்.

கடந்த 2007-ம் ஆண்டு திமுக ஆட்சியில், மதுரவாயல் - சென்னை துறைமுகம் இடையில் பறக்கும் சாலை திட்டம் உருவாக்கப்பட்டது. ரூ.1,815 கோடி மதிப்பிலான இத்திட்டத்துக்கு 2007-ல் பிரதமராக இருந்த மன்மோகன் சிங் அடிக்கல் நாட்டினார். 2011-ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், அப்போதைய அதிமுக அரசு, திட்டம் தொடர்பாக ஆய்வு செய்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்