Friday, February 25, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/02/26/large/771622.jpgசென்னை புத்தகக் காட்சியில் அஞ்சல் துறை சார்பில் தனி அரங்கம்: நண்பர், உறவினர்களுக்கு நூல்களை அனுப்ப ஏற்பாடு

சென்னை: சென்னை புத்தகக் காட்சியில் வாங்கும் புத்தகங்களை வெளியூரில் உள்ள உறவினர், நண்பர்களுக்கு அனுப்ப வசதியாக அஞ்சல் துறை சார்பில் தனி அரங்கம் இன்று முதல் செயல்பட உள்ளது.

பபாசி சார்பில் 45-வது சென்னை புத்தகக் காட்சி, நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் கடந்த 16-ம் தேதி முதல் நடந்து வருகிறது. இதில் 800 அரங்குகள் இடம்பெற்றுள்ளன. 500-க்கும் மேற்பட்ட பதிப்பகத்தார் தங்கள் படைப்பு நூல்களை விற்பனைக்கு வைத்துள்ளனர். புத்தகக் காட்சி தினமும் காலை 11 முதல் இரவு 8 மணி வரை செயல்பட்டு வருகிறது. மார்ச் 6-ம் தேதி வரை செயல்படும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்