Wednesday, March 30, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/03/31/large/783484.jpgதுறை வாரியான மானியக் கோரிக்கைகளை நிறைவேற்ற ஏப்.6 முதல் மே 10 வரை சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும்: மு.அப்பாவு அறிவிப்பு

சென்னை: துறைவாரியான மானியக் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக ஏப்.6 தொடங்கி மே 10-ம் தேதி வரை சட்டப்பேரவைக் கூட்டம் நடக்கும் என்று பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் மார்ச் 18-ம் தேதி பொது பட்ஜெட்டும், 19-ம்தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து மார்ச் 24-ம் தேதி வரைபட்ஜெட்கள் மீதான விவாதம் நடந்தது. அத்துடன் தேதி குறிப்பிடாமல் பேரவை தள்ளிவைக்கப்பட்டது. அதன்பின், துறை வாரியான மானிய கோரிக்கைகள் விவாதத்துக்காக சட்டப்பேரவை மீண்டும் ஏப். 6-ம்தேதி தொடங்கும் என்றும், கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்த அலுவல் ஆய்வுக்குழு கூடி முடிவு செய்யும் என்றும் பேரவைத் தலைவர் மு.அப்பாவு அறிவித்திருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்