
சென்னை: தமிழகத்தில் ஓராண்டுக்குள் பாரத் நெட் திட்ட பணிகள் முடிக்கப்பட்டு அனைத்து கிராம ஊராட்சிகளுக்கும் அதிவேக இன்டர்நெட் வசதி வழங்கப்படும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.
தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் முன்னிலையில், தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் (டான்பிநெட்), தமிழகத்தில் பாரத் நெட் திட்டத்தை செயல்படுத்தும் முதன்மை திட்ட ஒருங்கிணைப்பாளரான பாலிகேப் என்ற நிறுவனம்இடையே சேவை தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்