Saturday, May 28, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/05/28/large/806074.jpgவைகை கரை சாலையில் சைக்கிள் டிராக்: மதுரை மாநகராட்சியின் சிறப்பு ஏற்பாடு

மதுரை: சைக்கிளிங் செல்வோர் வசதிக்காக வைகைக் கரை சாலையில் மதுரை மாநகராட்சி சார்பில் ‘சைக்கிள் டிராக்’ அமைக்க ஏற்பாடு செய்யப்படுகிறது

பெட்ரோல் விலை உயர்வால் பொதுமக்களால் தற்போது கார், இருசக்கர வாகனங்களை முன்போல் தாராளமாக பயன்படுத்த முடியவில்லை. முன்போல் தற்போது ஒரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு வேலைக்கு செல்வதற்கு பொதுபோக்குவரத்தை பயன்படுத்த முடியவில்லை. ஆட்டோக்கள் கட்டணமும் பல மடங்கு உயர்ந்துவிட்டது. பொதுபோக்குவரத்து வாகனங்கள் சரியான நேரத்திற்கு வருவதில்லை. அதனால், வேலைக்கு செல்ல வேண்டிய இடங்களுக்கு சரியான நேரத்தில் செல்ல முடியவில்லை. அதனால், பெட்ரோல் செலவு குறைக்க, சுற்றுச்சூழல் காக்க, உடல்நலமாக சைக்கிள் உதவும் என்பதால் மதுரை மக்கள் பலர் தற்போது சைக்கிளில் செல்கின்றனர்.

தபால்காரர்கள், சிறு வியாபாரிகள், மாணவர்கள், பெண்கள், முதியவர்கள் மதுரையில் நிரந்தரமாக சைக்கிளில் செல்கிறார்கள். கரோனா காலத்திற்கு பிறகு இளைஞர்களும் தற்போது உடல் ஆரோக்கியதற்திற்காக தங்கள் வேலை செய்யும் இடங்களுக்கு செல்வதற்கும் அருகில் செல்வதற்கும் தற்போது சைக்கிகளை பயன்படுத்துவது ஒரு பழக்க வழக்கமாக மாற்றியுள்ளனர். அந்த வகையில் தற்போது மதுரை மாநகரில் ஏராளமான சைக்கிள் கிளப்புகள் உள்ளன. அவற்றில் 50க்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்