
சென்னை: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வரும் 26, 27-ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கேரளா மற்றும் கர்நாடகப் பகுதிகளில் தென்மேற்குப் பருவமழையின் தீவிரம் குறைந்துள்ள நிலையில், தமிழகப் பகுதிகளில் மழைப் பொழிவு அதிகரித்துள்ளது. குறிப்பாக, நேற்று முன்தினம் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கனமழை பெய்தது. அடுத்த சில தினங்களுக்கும் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்