
சென்னை: முதல்வர் சட்டம் - ஒழுங்கு பிரச்சனையில் உடனடியாக தனிக் கவனம் செலுத்தி நாட்டையும், மக்களையும் வன்முறையாளர்களிடம் இருந்து காக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "கடந்த ஒன்றரை ஆண்டு கால திமுக ஆட்சியில் தீவிரவாதம், பயங்கரவாதம், கொலை, கொள்ளை, வன்முறை ஆகியவை தலைவிரித்து ஆடுகிறது என்றும்; சட்டம் - ஒழுங்கு சீர்செய்யப்பட்டால்தான் தமிழகம் தொழில் வளத்திலும், பொருளாதார வளர்ச்சியிலும் முன்னேறும் என்றும் சுட்டிக்காட்டி, சட்டம் ஒழுங்கை சீர் செய்ய முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எனது அறிக்கைகள் வாயிலாக அவ்வப்போது வேண்டுகோள் விடுத்து வந்துள்ளேன்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்