
மதுரை: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவர்கள், பிறந்து 3 நாளே ஆன குழந்தையின் நாக்கிற்கு அடியில் உள்ள நீர் கட்டியை அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றி உயிரை காப்பாற்றியுள்ளனர்.
கடந்த ஒரு ஆண்டிற்கு முன் விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் குழந்தை கவினுக்கு பிறந்த முதல் நாளிலே நாக்கிற்கு அடியில் நீர் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. குழந்தை சுவாசிக்கவும், மூச்சிவிடவும் சிரமப்பட்டு உயிருக்குப் போராடியுள்ளது. மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்தனர். குழந்தைகள் அறுவை சிகிச்சைத்துறை தலைவர் பேராசிரியர் எஸ்.மீனாட்சி சுந்தரி மற்றும் அவரது மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்தனர். உயிரை காப்பாற்ற உடனடியாக குழந்தையின் நாக்கின் அடியில் உள்ள நீர் கட்டிய அகற்ற வேண்டிய இருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்