Tuesday, December 27, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/12/28/large/921058.jpgவழக்கறிஞர்கள் சங்க தேர்தல் | துண்டு பிரசுரம் இல்லை.. அன்பளிப்புகள் இல்லை..!

சென்னை: நீண்ட இடைவெளிக்குப் பிறகு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெறும் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தேர்தல் ஜன.9-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், பல்வேறு பதவிகளுக்குப் போட்டியிடும் வேட்பாளர்கள், தேர்தல் நிபந்தனைகளைப் பின்பற்றி கைகுலுக்கி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் மிகவும் பழமையான சங்கங்களில் ஒன்றாக சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் (எம்எச்ஏஏ) உள்ளது. 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த சங்கத்தில் சுமார் 17 ஆயிரம் வழக்கறிஞர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த சங்க நிர்வாகிகள் தேர்தல் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுவது வழக்கம். கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தலைவராக ஜி. மோகனகிருஷ்ணன், செயலாளராக ஆர்.கிருஷ்ணகுமார் உள்ளிட்டநிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 2018-ம் ஆண்டு தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டதை எதிர்த்துவழக்கறிஞர் கே.சத்யபால் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தேர்தலுக்கு தடைவிதித்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்