Thursday, December 29, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/12/30/large/921964.jpgபுத்தாண்டு கொண்டாட்டத்தில் போதை பொருள், ஆபாச நடனம் கூடாது - சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை

சென்னை: ஆங்கில புத்தாண்டு கொண்டாட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சென்னை வேப்பேரியில் உள்ள ஆணையர் அலுவலகத்தில் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் எவ்வித அசம்பாவிதமும் நடக்காமல் மகிழ்ச்சியுடன் அமைவதற்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை சென்னை காவல் துறை செய்துள்ளது. பாதுகாப்புப் பணியில் 16 ஆயிரம் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஊர்காவல் படையைச் சேர்ந்த 1,500 பேரும் பணியாற்றுவார்கள். 368 இடங்களில் வாகன தணிக்கை நடைபெற உள்ளது.

மது போதையில் வாகனம் ஓட்டினாலோ, அதிவேகமாக வாகனங்களை இயக்கினாலோ வழக்குப் பதிவு செய்து வாகனம் பறிமுதல் செய்யப்படும். ஓட்டுநர் உரிமமும் ரத்து செய்யப்படும். மது போதையில் விபத்து உயிரிழப்பை ஏற்படுத்தினால் கொலை வழக்குக்கு நிகரான பிரிவில்வழக்கு பதியப்படும். 18 வயதுக்கு உட்பட்டோர் வாகனம் ஓட்டினால் பெற்றோர் மீது நடவடிக்கை பாயும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்