
சென்னை: சென்னை அடையாறில் தீ விபத்துஏற்பட்ட வீட்டிலிருந்து 147 பவுன்நகைகள் கொள்ளை போனது. இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
அடையாறு, காந்தி நகர், 4-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர்முகிலன் (35). இவர் கட்டுமான தொழில் செய்து வருகிறார். அண்மையில் இவர் தனது குழந்தைகளை சொந்த ஊரான சேலத்தில் உள்ள உறவினர்களிடம் ஒப்படைத்துவிட்டு கடந்த 13-ம் தேதி மனைவியுடன் இலங்கைக்கு சுற்றுலா சென்றார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்