
திருப்பூர் / சென்னை: குடும்ப மறுமலர்ச்சிக்கு தான் மதிமுக என்பதை தங்களின் செயல்பாடு வெளிச்சம் போட்டு காட்டுகிறது என வைகோவுக்கு மதிமுக மாநில அவைத் தலைவர் திருப்பூர் சு.துரைசாமி கடிதம் எழுதியுள்ளார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு, திருப்பூர் சு.துரைசாமி 6-வது முறையாக கடந்த 3 நாட்களுக்கு முன்பு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பது: கட்சி தொடங்கிய காலத்தில் வாரிசு அரசியலுக்கு எதிரான தங்கள் உணர்ச்சிமிகு உரைகளை கேட்டே லட்சக்கணக்கானோர் உங்களை ஆதரித்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்