
தஞ்சாவூர்: பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை, கீழக்கோயில்பத்து கிராமத்தில், இறந்தவரின் உடலை ஒரு தரப்பினரின் தெரு வழியாக கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால், கல்வீச்சு, சாலை மறியல், போலீஸ் வாகனம் உடைத்து இருதரப்பினரிடைய மோதல் ஏற்பட்டு கலவரமாக மாறியதால் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கீழகோவில்பத்து கிராமத்தில், ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (53). இவர் இன்று அதிகாலை உயிரிழந்தார். இவரது உடலை வடபாதி கிராமம், ஆதிதிராவிடர் தெரு வழியாக இன்று மாலை எடுத்து சென்றுள்ளனர்.
அதற்கு, வடபாதி ஆதிதிராவிடர் தெருவினர், திருமண வரவேற்பு விழா நடப்பதால், வேறு வழியாக செல்ல கூறியுள்ளனர். ஆனால், சீனிவாசன் உடலை அந்த தெரு வழியாக தான் எடுத்து செல்வோம் என கூறி, சீனிவாசன் உறவினர்கள் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்