Saturday, May 27, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/05/27/large/997344.jpgநாடாளுமன்றத்தில் செங்கோல் | பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி சொல்லியிருக்க வேண்டும் - ஆளுநர் தமிழிசை

திருவண்ணாமலை: புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் தமிழகத்தின் செங்கோல் வைக்கப்பட உள்ளதற்காக, பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி கடிதம் எழுதியிருக்க வேண்டும் என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை இன்று இரவு (மே 27-ம் தேதி) சுவாமி தரிசனம் செய்தார். முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “நாடாளுமன்ற கட்டிடம் நாளை (இன்று) திறக்கப்பட உள்ளது. 800 பேர் அமரலாம். நாடாளுமன்ற கட்டிடத்துக்கு, நமது வாழ்த்துகளை தெரிவித்து கொள்வோம். நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்படுவதை இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நபரும் பெருமைபட்டாலும், தமிழர்கள் அனைவரும் பெருமைபட கூடிய நிகழ்வு உள்ளது. திருவள்ளுவர் எடுத்து கூறிய நல்லாட்சியின் அடையாளமாக, தமிழகத்தின் செங்கோல் நிறுவப்பட உள்ளது. எந்த மாநிலத்துக்கும் கிடைக்காத பெருமை தமிழகத்துக்கு கிடைத்துள்ளது. ஆனால், செங்கோல் குறித்து அரசியலாக்கப்பட்டுள்ளது. செங்கோல் இருந்ததா, ஆட்சி மாற்றத்துக்குதான் கொடுத்தார்களா என பேச்சு எழுந்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்