Thursday, July 27, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/07/27/large/1068625.jpgதிமுக உட்கட்சி பூசல் விஸ்வரூபம்: நெல்லை மாவட்ட பொறுப்பாளர் கொலை மிரட்டல் விடுத்ததாக கவுன்சிலர்கள் தர்ணா

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சி கூட்டத்தில் திமுக உட்கட்சி பூசல் மீண்டும் விஸ்வரூபமாக வெளிப்பட்டது. மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிவித்து மண்டல தலைவர்கள், பெண் கவுன்சிலர்கள் மாநகராட்சி கூட்ட அரங்கில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேயருக்கு எதிராக திமுக கவுன்சிலர்கள் கோஷமிட்டனர். கூச்சல், குழப்பத்துக்கு இடையே கூட்டம் நடைபெற்று முடிந்தது.

திருநெல்வேலி மாநகராட்சி சாதாரண மற்றும் அவசர கூட்டங்கள் நேற்று காலை 10.30 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு முன்னதாக காலை 9.30 மணிக்கு வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தல் மாநகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது. இம்மாநகராட்சியில் 55 மாமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அனைவரும் தேர்தலில் கலந்து கொண்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்