
மதுரை: மதுரையில் நேற்று அதிகாலை ரயில் பெட்டியில் நேரிட்ட தீ விபத்தில் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் 9 பேர் உயிரிழந்தனர்.
இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) சார்பில் ரயில் பெட்டிகளை முன்பதிவு செய்து, ஆன்மிகத் தலங்களுக்குச் சுற்றுலா செல்வது நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்டோர், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு சுற்றுலா செல்லத் திட்டமிட்டு, ஐஆர்சிடிசி மூலம் ரயில் பெட்டியை முன்பதிவு செய்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்