Friday, August 25, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/08/26/large/1108651.jpgமதுரையில் அதிகாலையில் சோகம் | நின்றிருந்த சுற்றுலா ரயிலில் தீ விபத்து - இருவர் பலி

மதுரை: மதுரை ரயில் நிலையில் நின்றிருந்த ரயில் பெட்டியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் இரண்டு பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

லக்னோ - ராமேஸ்வரம் சுற்றுலா ரயிலில் மதுரையில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் ரயில் பெட்டி திடீரென தீப்பற்றி எரிந்தது. இதில் சிக்கி இருவர் உயிரிழந்தனர். இவர்கள் இருவரும் உத்தரபிரதேசத்தில் இருந்து ராமேஸ்வரத்துக்கு சுற்றுலா வந்தவர்கள் என கூறப்படுகிறது. விபத்தில் காயமடைந்தவர்கள் மற்றும் மேலும் உயிரிழந்தவர்கள் விவரங்கள் தெரியவில்லை. நள்ளிரவு நேரத்தில் ஏற்பட்ட இந்த பயங்கர தீ விபத்தால் தீ மளமளவென எரிந்தது. முதல்கட்ட தகவல்படி சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. தீ விபத்தின் போது பொருட்கள் வெடிப்பதால் சிலிண்டர் வெடித்து தீ பரவியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

ரயிலில் தீ பற்றியதற்கான காரணம் முழுமையான விசாரணைக்கு பிறகே தெரிய வரும். எனினும் பயங்கர தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த தீ விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்