
சென்னை: வடலூரில் இன்று (ஆக. 30) பாமக சார்பில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி மறுத்துள்ள உயர் நீதிமன்றம், விழுப்புரம் அல்லது கள்ளக்குறிச்சியில் பொதுக்கூட்டம் நடத்தலாம் என்று உத்தரவிட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் வடலூர் பேருந்து நிலையம் அருகே இன்று பாமக சார்பில் 35-ம் ஆண்டு விழா பொதுக் கூட்டம் நடத்த நெய்வேலி டிஎஸ்பி மற்றும் வடலூர் போலீஸார் அனுமதி மறுத்ததை எதிர்த்து, அக்கட்சியின் மாவட்டச் செயலர் முத்துகிருஷ்ணன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்