
மதுரை: கலைஞர் நூற்றாண்டு நூலகம் அருகே உள்ள இரண்டு பேருந்து நிறுத்தங்களில் அரசு பேருந்துகள் நிற்காமல் ஒரு கி.மீ., தாண்டி உள்ள பேருந்து நிறுத்தத்தில் நிறுத்துவதால், பொதுமக்கள், மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை புது நத்தம் சாலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் திறந்து வைத்த கலைஞர் நூற்றாண்டு நூலகம் உள்ளது. இந்த நூலகம் மொத்தம் 6 தளங்களுடன் 3 லட்சம் புத்தங்கங்களுடன் ஆசியாவிலேயே மிக பிரமாண்டமாக ரூ.130 கோடியில் கட்டப்பட்டுள்ளது. தினமும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த நூலகத்திற்கு வந்து செல்கிறார்கள். அவர்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தென் மாவட்ட பள்ளி மாணவர்கள். அவர்கள் ஆர்வமாக கலைஞர் நூலகத்துக்கு வருகிறார்கள். ஆய்வு நோக்கத்துக்காக தமிழகம் முழுவதும் இருந்து கல்லூரி மாணவர்கள் வருகிறார்கள்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்