Friday, September 29, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/09/30/large/1130627.jpgமேட்டூர் காவலர் பயிற்சி பள்ளியில் 54 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு: மருத்துவமனையில் 14 பேர் அனுமதி

மேட்டூர்: மேட்டூர் காவலர் பயிற்சி பள்ளியில் 54 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 14 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சேலம் மாவட்டம் மேட்டூரில் காவலர் பயிற்சி பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் காவலர் தேர்வில் வெற்றி பெற்ற 492 ஆண் காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த வாரம் விநாயகர் சதுர்த்தி பண்டிகை பாதுகாப்பு பணிக்காக திருப்பூர், காங்கேயம், கோவை உள்ளிட்ட பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பாதுகாப்பு பணிகள் முடிந்து மீண்டும் காவலர் பயிற்சி பள்ளிக்கு திரும்பிய 54 பயிற்சி காவலர்களுக்கு சளி, காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்